கடவுள்
உயிருள்ளவர் உருவமற்றவர்;
ஒளியானவர் ஒலிக்கு அப்பாற்பட்டவர்.
தாய்
ஆதி முதல் நம்மிடம் ஏமாந்துப் போவாள்;
இறுதிவரை நம்மிடம் உண்மையாக இருப்பாள்.
காதலி
ஆதி முதல் நம்மிடம் பொய்யாக இருப்பாள்;
இறுதியில் நம்மை ஏமாற்றி விட்டுப் போவாள்.
நட்பு
இதன் வருகை இயல்பு;
கிடைத்துவிட்டால் என்றென்றும் சிறப்பு.
சூரியன்(ஆண்)
முதலில் சுட்டெரிப்பாய்;
இறுதியில் குளிர்ச்சி தருவாய்.
நிலா(பெண்)
முதலில் குளிரச் செய்து;
இறுதியில் சுட்டெரிப்பாய்.
மனசாட்சி
தவறு செய்தால் நம்மைத் தூங்க விடாது;
நன்மை செய்தால் நம்முள் தங்க விடாது.
வாலிபம்
பருவத்தில் இவன் என்றும் ராஜா;
தேடிச் செல்லும் இடமோ ரோஜா.
பெண்
நில் கவனி செல்;
செல்லாவிட்டால் நடுத் தெருவில் நில்.
மனிதன்
ஆறறிவைப் பெற்றவன்;
அறிவற்றுக் கிடப்பவன்.
Tuesday, August 25, 2009
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
en ungaluku ivalavu sogam
Post a Comment