Friday, October 2, 2009

ராமு சோமு காமெடிகள்

1)
ராமு : நேற்று ராத்திரி போலீஸ் வீட்டில் ஆட்டைய போட போனது தப்பா போச்சு.
சோமு : ஏன் என்னாச்சு?
ராமு : போலீஸ்காரன் கிட்ட மாட்டிகிட்டேன். அவன் என் கையில இருக்கிற மத்தவங்க திருட்டு பணத்தையும் லஞ்சமா பிடுங்கிட்டான்.

2)
ராமு : சார், ஏன் அந்த போலீஸ்காரர் நகை தொலஞ்சு போச்சுனு கம்பிளைன்ட் கிடச்சும் நடவடிக்கை எதுவும் எடுக்காம இருக்காரு.
சோமு : இதை அந்த போலீஸ்காரர் கிட்ட கேட்டா, திருடன் கிட்ட இருந்து எந்த தகவலும் வரலைன்னு சொல்றாறு.

3)
மு‌ட்டா‌ள்:
ஒருவனு‌க்கு தொலைபேசி அழைப்பு வருகிறது. எதிர்முனையில் இருப்பவர் ராமு, உங்கள் மகள் இறந்து விட்டாள் என்கிறது அ‌ந்த‌க் குர‌ல்.

துக்கம் தாளாமல் கட்டிடத்தின் 100 வது தளத்திலிருந்து சர்தார்ஜி குதித்து விடுகிறார்.

50வது தளத்தை அடையும் போது அவருக்கு நினைவுக்கு வருகிறது தனக்கு மகள் இல்லையென்று.

25வது தளத்தை அடையும் போதுதா‌ன் அவருக்கு நினைவுக்கு வருகிறது தனக்கு இன்னும் திருமணமே ஆகவில்லையென்று.

10வது தளத்தை அடையும் போது அவருக்கு நினைவுக்கு வருகிறது தன் பெயர் ராமு அல்ல சோமு என்று.

4)
3 * 2 என்ன ?
ராமு : ஏன் சோமு சோகமா வர
சோமு: வாத்தி என்ன வீட்டுக்கு போக சொலிட்டாரு. எனக்கு கணக்கு சரியா வரலைன்னு சொலிட்டாரு.
ராமு : என்ன கேள்வி கேட்டார் அவ்வளவு கஷ்டமா??
சோமு : 3 * 2 = ? என்னன்னு கேட்டார்
ராமு : நீ என்ன பதில் சொன்ன?
சோமு : 6'ன்னு சொன்னேன்.
ராமு : சரியா தானே சொல்லி இருக்கே..
சோமு : ம‌றுப‌டியும் 2 * 3 = ? என்னன்னு கேட்டார்
ராமு : என்ன‌ எழ‌வுடா இது? என்ன‌ வித்தியாச‌ம் இருக்கு? முட்டாளா?
சோமு: நீ என்ன‌ சொன்ன‌யோ அதைத் தான் அப்ப‌டியே பதிலா
சொன்னேன், வீட்டுக்கு அனுப்பிட்டாரு.